பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் மாணவர்களுக்கு நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 01, 2019

பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் மாணவர்களுக்கு நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே கடந்த 50 ஆண்டுகளாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் பலர் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்ட பள்ளி செல்லும் வழியில் ஜல்லி, மணல் ஆகியவற்றை கொட்டி உள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்ல வழி விடாமல் வீடு கட்டி விடுவாரோ என நினைத்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வீடு கட்ட ஏற்பாடு செய்தவரும் பள்ளிக்கு செல்ல வழிவிட்டு வீடு கட்டுவதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது பள்ளி செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு, செல்லும் வழியாக தனியார் பட்டா நிலத்தை வழியாக கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று வந்துள்ளனர்.இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டஜல்லி, மணல் ஆகியவற்றை அந்த வழியில் கொட்டி வைத்துள்ளார். பள்ளிக்கு செல்ல வழி விடாமல் வீடு கட்டி விடுவாரோ என நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கு செல்ல வழிவிட்டு வீடு கட்டுவதாக அந்த நபரும் உறுதியளித்தார் பின், சாலை மறியல் கைவிடப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews