👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேராவூரணி அருகே, விபத்தில் சிக்கிய, அரசுப் பள்ளி மாணவிக்கு, ஆசிரியர்கள் சார்பில் நிதி வசூலித்து, 1.31 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த, மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர், அப்துல் ரகுமான்; எலக்ட்ரீசியன். இவரது மகள், அப்ரா பாத்திமா, 8, அப்பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 10ம் தேதி, பள்ளியிலிருந்து, அப்ரா பாத்திமா, வீட்டிற்கு நடந்து சென்றபோது, மது போதையில், இருசக்கர வாகனத்தில், அதி வேகமாக வந்த ஆசாமி, அப்ரா பாத்திமா மீது மோதினார். இதில், மாணவியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
ஏழ்மை நிலையில் இருந்த, மாணவியின் மருத்துவச் சிகிச்சைக்காக, பல்வேறு தரப்பினரும் உதவி செய்தனர். இதனால், சிகிச்சை பெற்று, அந்த மாணவி வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவிக்கு உதவ, சேதுபாவாசத்திரம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், 1.31 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள, 'இந்தியன் ஓவர்சீஸ்' வங்கியில், மாணவி பெயரில், கணக்கு தொடங்கிய ஆசிரியர்கள், அந்த தொகையை, 'டிபாசிட்' செய்துள்ளனர்.
வரும், 2029ல், மாணவி, கல்லுாரி செல்லும் போது, முதிர்வு தொகையாக, 2.58 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதற்கான பத்திரத்தை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா ஆகியோர் முன்னிலையில், மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம், நேற்று, ஆசிரியர்கள்
வழங்கினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U