👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெரம்பலூர் அருகே நாட்டுக்காக ஹாக்கி விளையாட துடிக்கும் நரிக்குறவர் இன மாணவன் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் கல்விக்கட்டணம் கட்டமுடியாத நிலையில் தவித்து வருகிறார். ஊசி, பாசி விற்று பிழைத்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டது நரிக்குறவர் சமுதாயம். பெரிய வருவாய் இல்லாவிட்டாலும் அத்தொழிலை தொடரும் இவர்கள் அடுத்த தலைமுறையாவது கல்வி கற்று உயரவேண்டும் என்று தங்களது வாரிசுகளை படிக்க வைத்து வருகின்றனர். அப்படி வாழ்விலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய நரிகுறவர் சமுதாயத்தை சார்ந்த சதீஷ்குமார் பெரம்பலூர் அருகே காரை மலையப்ப நகர் நரிகுறவர் குடியிருப்பை சேர்ந்தவர். ஹாக்கி மீது தீராத ஆர்வம் கொண்ட சதிஷ், பெரம்பலூர் தனியார் கல்லூரியில் B.sc உடற்கல்வி பயின்றுள்ளார்.
அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி ஆசிரியர்க்கல்வியை பெற விண்ணப்பித்துள்ள சதீஷுக்கு கல்விக்கட்டணம் தடையாய் நிற்கிறது. பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் ஆண்டுக்கு ரூ.40,000வரை கட்டணம் கட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இது குறித்து அவர் தந்தை கூறியதாவது : எங்கள் நரிக்குறவர் இனத்தில் யாரும் எங்கள் தொழிலை வைத்து பணம் சேர்க்க முடியாது, ஒருநாள் தொழிலுக்கு செல்லவில்லை என்றால் ஒருநாள் உணவிற்கு கஷ்டப்படும் அவலம் உருவாகிவிடும். எங்கள் வாரிசுகளை ஊக்குவித்து படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று அவர் கூறினார்
இன்னும் ஓரிரு தினங்களில் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மாற்று மாணவனின் பெயர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் சேரமுடியாமல் சதீஷ்குமார் தவிக்கிறார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U