👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வித்தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் தமிழகத்தில் எத்தனை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன?, அவற்றை நிரப்ப கிராம நிர்வாக உதவியாளர்களை, கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். தற்போது காலியாக உள்ள இடங்களில் ஓய்வு பெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்கள் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிராம உதவியாளருக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார். மேலும் குறிஞ்சிப்பாடியில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை இடம் மாற்றுவது குறித்த எழுப்பிய கேள்விக்கு, மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கிராம நிர்வாக உதவியாளர்கள் பதவியில் இருப்பவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U