👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சிறை
தேவகோட்டையில், பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, உடற்கல்வி ஆசிரியருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள, அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர், வேதமாணிக்கம் 50. கடந்த, 2012ல், பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற போது, பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.தேவகோட்டை நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலியல் குற்றத்துக்காக, வேதமாணிக்கத்துக்கு, இரண்டு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், மூன்று ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு தண்டனையையும், ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U