👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தற்காலிக பணியில் உள்ள, கால்நடை மருத்துவர்கள், 850 பேரை, பணி நிரந்தரம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, கால்நடை துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில், தி.மு.க., - சுந்தர், ''காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, கலியப்பேட்டை மற்றும் கம்மாளம்பூண்டி பகுதிகளில், கால்நடை மருந்தகங்கள் அமைக்க வேண்டும். கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக பணியில் உள்ள கால்நடை மருத்துவர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த, அமைச்சர் ராதாகிருஷ்ணன், ''கம்மாளம்பூண்டியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட, கால்நடை மருத்துவர்கள், 850 பேரை, பணி நிரந்தரம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U