அமைச்சர், அதிகாரிகளுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

அமைச்சர், அதிகாரிகளுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக, முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு, ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார், பொதுச் செயலர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தினோம். கடந்த மாதம், கோரிக்கைகள் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனரை சந்தித்து பேசப்பட்டது. அதில், கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.காலி இடங்களை நிரப்ப, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, இயக்குனர் உறுதியளித்தார்.தற்போது, 300க்கும் மேற்பட்ட கவுரவ பாலசேவிகா, முன்மழலையர் பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமிக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews