👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உபி.,யில் அரசு ஊழியர்கள் மற்ற எவரிடம் இருந்தும், எந்தவிதமான பரிசுப் பொருட்களையும் பெற, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
சமீபத்தில் ஆலோசனை கூட்டங்களில் ஊழியர்கள் யாரும் மொபைல்போன் எடுத்து வர கூடாது என்றும், பணியாளர்கள் காலை 9 மணிக்கே அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் எனவும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். தற்போது, ஊழியர்கள் யாரும் எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சட்டசபைக்குள்ளோ, மற்ற அரசு கட்டிடங்களுக்குள்ளோ எந்த விதமான பரிசுப் பொருட்களுடன் வரும் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அப்படி வந்தாலும், ஊழியர்கள் யாரும் தங்களின் உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் அவற்றை வாங்கக் கூடாது.
இதனை அனைத்து அமைச்சர்களும் ஊழியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசு அலுவலகங்களில் குட்கா அல்லது பான் பயன்படுத்துவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவையும் முதல்வர் பிறப்பித்துள்ளார்.
பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் புத்தாண்டு, ஹோலி என பல பண்டிகைகளுக்கும் டைரிகள் முதல் வெள்ளி பொருட்கள் வரை லஞ்சத்தை பரிசாக பெற்று வருகின்றனர். இதனை தடுக்கவே உ.பி., அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் கீழ்மட்ட ஊழியர்கள் பலர் அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U