👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் சத்துணவு திட்ட ஆசிரியர்கள், மகளிர் நல அலுவலர்கள் மற்றும் ஊட்டச்சத்து அலுவலர்கள் 15 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்.மாநிலத்தில் சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரிந்த இரண்டு லட்சம் பேரில் ஆசிரியர் பயிற்சி (பி.எட்.,) முடித்தவர்களுக்கு டி.ஆர்.பி., மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2004, 2006 மற்றும் 2012 ம் ஆண்டுகளில் தகுதி பெற்ற 880 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.அங்கன்வாடியில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 2200 பேர் சமூக நலத்துறையில் மகளிர் ஊர்நல அலுவலர், சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளராக (கிரேடு 2) நியமனம் செய்யப்பட்டனர்.சத்துணவு திட்டத்தில் 1982 முதல் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் கல்வித்துறை, சமூக நலத்துறைகளில் பணி நியமனம் பெற்ற இவர்களுக்கு சத்துணவு பணிக்காலத்தை கணக்கிடாததால் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதை வலியுறுத்தி 15 ஆண்டுகளாக போராடுகின்றனர்.பட்டதாரி ஆசிரியர் மகளிர்நல அலுவலர் மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் சங்கர்பாபு கூறியதாவது: சென்னையில் ஜன.,யில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர், இயக்குனர் பேச்சு நடத்தி இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஜூலை 10 நடந்த துறை மானியக் கோரிக்கையில் இதுகுறித்து அறிவிப்பும் இல்லை. இதனால் சென்னையில் செப்.,23 சிறை செல்லும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U