👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் காரியாபட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தோணுகால், வரலொட்டி, தண்டியனேந்தல், கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 48 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதுதவிர தற்காலிக ஆசிரியர்கள் 13 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிப்பதில் சிக்கல் உள்ளது.
இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிய பழனிச்சாமி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். ஏற்கனவே காலியிடங்கள் உள்ள நிலையில், இயற்பியல் ஆசிரியர் பணியிடமும் காலியானதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றுகாலை பள்ளிக்கு வந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, காரியாபட்டி - விருதுநகர் ரோட்டில் பள்ளி எதிரே மறியலில் ஈடுபட்டனர். காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரியும், இயற்பியல் ஆசிரியர் மேலும் ஓராண்டு பணியாற்ற அனுமதிக்க கோரியும் மாணவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்து மல்லாங்கிணறு எஸ்ஐ அசோக்குமார் தலைமையிலான போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U