👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி கட்டணத்தை காரணம் காட்டி குழந்தைகளை அனுமதிக்க மறுக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி, உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு 3 குழந்தைகளுடன் வந்த தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இறைச்சிக்கடை ஊழியர். இவரது குழந்தைகள் திகோ (13), திவானி (10), திலோ சுந்தர் (7). இவர்கள் உசிலம்பட்டி கவுனம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மூன்று குழந்தைகளுக்கும் கடந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல் பாண்டி பாக்கி வைத்திருக்கிறார். தற்போது, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டதையடுத்து, கட்டணத்தை செலுத்த பாண்டி பள்ளிக்கு சென்றுள்ளார்.
கல்வி கட்டணத்தை வாங்க மறுத்து, பள்ளி முதல்வரை பார்க்கும்படி அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘முறையாக கல்வி கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்ததால் உங்கள் குழந்தைகள் இனி இங்கு படிப்பை தொடர முடியாது. டிசியை வாங்கி கொள்ளுங்கள்’ என்று பள்ளியின் முதல்வர் கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாண்டியின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் புறக்கணித்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த 18ம் தேதி உசிலம்பட்டி நகர் போலீசில் பாண்டி புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை தனது 3 குழந்தைகளுடன் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு பாண்டி வந்தார். தனது குழந்தைகளை அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பாண்டி, திடீரென மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாண்டியிடம், டிஎஸ்பி ராஜா விசாரணை நடத்தினார். பள்ளி சீருடையோடு 3 குழந்தைகளுடன் வந்து, டிஎஸ்பி அலுவலகத்தில் தந்தை தீக்குளிக்க முயன்றது, இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U