இன்ஜி., கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

இன்ஜி., கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பொறியியல் கல்லுாரியில் அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்துாரில் தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது. அங்கு தமிழகம் மற்றும் வெளிமாநில மாணவ - மாணவியர் தங்கி படிக்கின்றனர். அவ்வாறு படித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுபிரியா 21 என்ற மாணவி மே 26ல் கல்லுாரியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அடுத்த நாள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சவுத்ரி 19 என்ற மாணவர் கல்லுாரி விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். அவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஜூலை 15ல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தர்சன் 18 என்ற மாணவர் கல்லுாரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.மூன்று மாதங்களில் ஒரு மாணவி இரு மாணவர்கள் என மூன்று பேர் அடுத்தடுத்து இறந்தது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரித்து வந்தனர். 'ராகிங் கொடுமை பேராசிரியர்களின் டார்ச்சர் மற்றும் பாலியல் தொல்லை காரணமாக மூன்று பேரும் இறந்து இருக்கலாம். அவர்களை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் மூன்று பேரும் தற்கொலை செய்து இறந்தனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரிக்க வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்து சிபிசிஐடி விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். மே 26ல் அனுப்பிரியா எனும் மாணவி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மே 27ல் அனித் சவுத்ரி எனும் மாணவன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விடுதியில் மர்ம மரணம் அடைந்தார். கடந்த 15 ந் தேதி தர்ஷன் எனும் மாணவன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews