லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்(BEO) சஸ்பெண்ட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்(BEO) சஸ்பெண்ட்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆம்பூரில் லஞ்சம்கேட்ட வட்டார கல்வி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயங்கும் சிறுபான்மையினர் பள்ளிகள் மாதனூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதில் ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியின் ஆசிரியர் தற்போது ஒய்வு பெற்றுள்ளார். இவருக்கு ஓய்வு உள்ளிட்ட பல்வேறு ஊதிய பலன்களை வழங்குவதற்கான ஆணை, மாநில கணக்கு அலுவலகத்தில் இருந்து மாதனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரியும் மாதேஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட்டார கல்வி அலுவலரான மாதேஷ் அந்த பள்ளியின் தலைமையாசிரியரை போனில் தொடர்பு கொண்டு ஓய்வு நிதி வழங்க அந்த ஆசிரியரின் ஓய்வூதிய பலனில் இருந்து தனக்கு உள்ள ஒரு கடனை தீர்க்கவோ அல்லது தனது மகளின் கல்வி கட்டணத்தை செலுத்தவோ லஞ்சம் கேட்கும் ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதுகுறித்து செய்தி தினகரன் நாளிதழில் நேற்று வெளியானது.இந்நிலையில் லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர் மாதேஷ்க்கு தற்காலிக பணி நீக்கம் நோட்டீஸ் (17இ) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews