ATM கட்டணங்களை குறைக்க RBI ஆலோசனை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

ATM கட்டணங்களை குறைக்க RBI ஆலோசனை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
NEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது..! ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின் இந்த NEFT & RTGS பயன்பாடுகள் பெரிய அளவில் அதிகரித்திருப்பதை ஆர்பிஐயின் அறிக்கைகள் சொல்கின்றன. அந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க NEFT & RTGS போன்ற வெகு ஜன மக்கள் பயன்படுத்தும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கு ஆர்பிஐ வசூலிக்கும் கட்டணத்தை இனி (ஜூலை 01, 2019 முதல்) வசூலிக்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அதோடு ஆர்பிஐ வசூலிக்காத கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல், இந்த பயனை மக்களுக்கு சென்றடையும் படி தங்கள் NEFT & RTGS கட்டணங்களைக் குறைக்குமாறும் ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது.
இரண்டு முறைகள் NEFT தற்போது இந்தியாவில் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு NEFT பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, NEFT பணப் பரிவர்த்தனைகளுக்கு 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் தொகையைப் பொறுத்து கட்டணம் வசூலித்து வந்தன. இனி ஆர்பிஐ இந்த NEFT பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என்பதால் கட்டணம் பெரிய அளவில் இன்றில் இருந்தே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் டி ஜி எஸ் RTGS பொதுவாகவே RTGS 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யும் பெரிய தொகைகளுக்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த RTGS முறையிலான பணப் பரிமாற்றங்களுக்கு 25 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் தொகையைப் பொறுத்து வசூலிக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த RTGS முறையிலும் ஆர்பிஐ தன் கட்டணத்தை வசூலிக்கப் போவதில்லை என்பதால் இதிலும் கணிசமாக கட்டணம் குறையும் என எதிர்பார்க்கிறார்கள் வங்கி வாடிக்கையாளர்கள்.
ஆய்வு கமிட்டி ஏடிஎம் கட்டணம் மத்திய ரிசர்வ் வங்கி அதோடு நிற்காமல், இந்திய வங்கிகள் சங்க முதன்மைச் செயல் அதிகாரி வி ஜி கண்ணன் தலைமையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் மீது வசூலிக்கப்படும் கட்டணங்களைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு உயர் மட்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறார்களாம். ஆக கூடிய விரைவில் ஏடிஎம் கட்டணங்களில் ஏதாவது நல்ல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறார்கள் சாதாரண மக்கள். ஏன் ஏடிஎம் ஏடிஎம் கோரிக்கை ஏன் திடீரென ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்ட் கட்டணங்களுக்கு உயர் மட்ட கமிட்டி அமைக்கிறது ஆர்பிஐ எனக் கேட்டால்... நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஏடிஎம் பயன்பாட்டை சுட்டிக் காட்டுகிறார்கள் ஆர்பிஐ அதிகாரிகள். அதோடு பல காலமாக தொடர்ந்து ஏடிஎம் கட்டணங்களை மாற்றவும் கோரிக்கைகள் வந்து கொண்டே இருப்பதையும் காரணமாகச் சொல்கிறது ஆர்பிஐ. எப்படியோ நல்லது நடந்தால் சரி. வாழ்க டிஜிட்டல் இந்தியா.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews