5 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

5 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரி களில் 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்பில் (பிஏ.எல்எல்பி) நடப்பாண் டில் சேர 7,690 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 7,371 பேரின் விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டி யல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட் டது. இதைத்தொடர்ந்து, கல்லூரியைதேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 8 முதல் 11-ம் தேதி வரை சென்னையில் தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கலந் தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தரவரிசை பட்டியலில் முதலிடத் தைப் பிடித்தகோவில்பட்டி மாணவி சுஷ்மிதா (கட் ஆஃப் மார்க் 99.5), 2-ம் இடம் பெற்ற கம்பம் மாணவி ஜெயதுர்கா (99.25) ஆகியோர் மதுரை அரசு சட்டக் கல்லூரியையும், 3-ம் இடத்தைப் பிடித்த கோவை சூலூர் மாணவி மல்லிகா கோவை அரசு சட்டக் கல்லூரியையும் தேர்வு செய்த னர். அவர்கள் மூவருக்கும் சட்டக் கல்வி இயக்குநர் என்.கே.சந்தோஷ் குமார் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டப் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) ஆர்.விஜயலட்சுமி. சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இன்று எஸ்டி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது
அரசு சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, 'கட் - ஆப்' மற்றும் தரவரிசை பட்டியலை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 11ம் தேதி வரையிலும் நடக்கிறது.
இந்த முறை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான கடிதம், பல்கலையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காதவர்கள், சட்ட பல்கலை வெளியிட்ட, கட் - ஆப் மதிப்பெண்ணுக்குள் இருந்தால், அந்த, கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு உரியவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்தப்படும் நாளில், பல்கலைக்கு நேரடியாக வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews