👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில் 45 பள்ளிகளில் மாணவர்களே இல்லாததால் தற்காலிக நுாலகங்களாக மாற்றப்பட உள்ளன'' என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க.-தங்கம் தென்னரசு: மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு நுாலகங்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. புதிய நுாலகங்கள் துவக்கப்படுவது வரவேற்புக்குரியது. ஆனால் பள்ளிகள் மூடப்பட்டு நுாலகங்கள் துவக்குவதை ஏற்க முடியாது.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது 12 ஆயிரம் ஊராட்சிகளில் நுாலகம் துவக்கப்பட்டது. அவை தற்போது செயல்படாமல் உள்ளன. அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: 1248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது தவறு. ஒரு மாணவர் கூட இல்லாத 45 பள்ளிகளை தற்காலிக நுாலகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த வகையில் புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதும் அந்த பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை. நுாலகங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே அது குறித்த கவலை உங்களுக்கு தேவையில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U