பி.இ. கலந்தாய்வு: இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு: 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

பி.இ. கலந்தாய்வு: இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு: 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் பொதுப் பிரிவு ஆன்-லைன் கலந்தாய்வு இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த ஆண்டும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கை காலியாக விடப்படும் நிலை உருவாகியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு முடிந்த பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. கலந்தாய்வின்போது தமிழகம் முழுவதும் 479 பொறியியல் கல்லூரிகளில் 1,67,652 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன. நான்கு சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 46,213 இடங்கள் நிரம்பின. 1,21,439 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன. இந்த நிலையில், 4-ஆம் சுற்று மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அதில், முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 36,000 பேரில், 33,567 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்திருந்தனர். இப்போது இவர்களில், 32,248 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீட்டை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ளது. இதை சனிக்கிழமைக்குள் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம், அவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு மற்றும் கல்லூரி சேர்க்கைக் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், நான்காம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்றுள்ள 32 ஆயிரம்பேரில், அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்படுவது உறுதியாகியுள்ளது என்றனர். அடுத்ததாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத் துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வும், காலியாக உள்ள எஸ்சிஏ பிரிவினரின் உள்ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்.சி. பிரிவினரை சேர்க்கும் கலந்தாய்வும் நேரடி முறையில் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews