அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர்: இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை: செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர்: இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை: செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறு, 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் என்றும், 70 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 முடித்தவுடன் மாணவ-மாணவிகளுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும், தற்போது 20 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறானது என்றும் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர். இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதாகவும், இதற்கான பட்டியல் அரசிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சென்னை ராயபுரம் மற்றும் போரூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பள்ளியில் படித்த இரு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews