👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பிளஸ் 1 இடங்களுக்கான கலந்தாய்வு துவங்கியது.
இதுவரை இடம் கிடைக்காத மாணவர்கள், தமிழக மாணவர்களும் இன்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு மே மற்றும் ஜூன் மாதம் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, காலியாக உள்ள இடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கலந்தாய்வு, முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் மேனிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
பத்தாம் வகுப்பில் 499 முதல் 250 மதிப்பெண் வரை எடுத்த மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பெற்றோருடன் வந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண், விருப்பங்களுக்கேற்ப அரசு பள்ளிகளில் இடம் அளிக்கப்பட்டது. கன்வீனர் தனசெல்வம், விரிவுரையாளர்கள் பானுமதி, பூபதி, சிவராமரெட்டி, சவுந்தரபாண்டியன், மோகன், கார்த்திகேயன் அடங்கிய குழுவினர் சான்றிதழ்களை சரி பார்த்து, சேர்க்கை ஆணை வழங்கினர்.
இரண்டாம் நாளான இன்று, 249 முதல் 175 மதிப்பெண் வரை எடுத்த புதுச்சேரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மேனிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போதும் இடம் கிடைக்காதவர்களும், பத்தாம் வகுப்பு துணை பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவர்களுக்கும், கலந்தாய்வு நடத்தி சேர்க்கை ஆணை வழங்கப்பட உள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் நகல், நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.தமிழக மாணவர்களும் சேரலாம்புதுச்சேரி குடியுரிமை இல்லாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேரலாம்.புதுச்சேரி குடியிருப்பு இல்லாத மாணவர்கள், இன்று மதியம் 2.30 மணிக்கு நேரடியாக கலந்தாய்வுக்கு வரலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U