கலை கல்லூரிகள் இன்று திறப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

கலை கல்லூரிகள் இன்று திறப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோடை விடுமுறை முடிந்து, நாளை , கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் விடுமுறை முடிந்து, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்பட்டன.சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் தனியார் நர்சரி பள்ளிகள், 6ம் தேதி திறக்கப்பட்டன.இதை தொடர்ந்து, கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறையும் முடிவுக்கு வருகிறது.
மே மாதம் அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை, நாளையுடன் முடிகிறது. ஒன்றரை மாதத்துக்கு பின், மீண்டும், நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பிளஸ் 2 முடித்து, புதிய மாணவ - மாணவியர் கல்லுாரி படிப்புகளில் சேர்ந்திருப்பர்.அவர்களை சீனியர் மாணவர்கள், 'ராகிங்' செய்வது, கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என, பல்கலை மானியக் குழு சார்பில், கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் சார்பில், கல்லுாரிகளில், ராகிங்கை கட்டுப் படுத்துவது குறித்து, எந்த உத்தரவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என, பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.புதிய மாணவர்களுக்கு, 'ஓரியண்டேஷன்' எனப்படும், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுமா; அவர்களுக்கு, கல்லுாரி கல்வி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews