அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், புதிய ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை, டி.ஆர்.ஓ., சாந்தி துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சி.இ.ஓ., மகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., சாந்தி நவீன ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை திறந்து வைத்தார். இது குறித்து சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது: மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க, அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதன்மை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வகம் அமைக்க, 12 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டு, 10 லட்சம் ரூபாயில் ஆய்வகமும், இரண்டு லட்சம் ரூபாய் செயல்பாட்டு கட்டணத்திற்கும் பயன்படுகிறது. இதில், ரோபோடிக்ஸ், சென்சார்கள், மூன்றடி அச்சுப்பொறி, கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தை மாணவர்கள் பயன்படுத்தி ரோபோடிக்ஸ் துறையில், தனித்திறனைகளை வளர்த்து கொள்ளலாம். இதில், மின்னணு சாதனங்களை மொபைல்போன் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய, ஐ.ஓ.டி., தொழில்நுட்ப வசதி உள்ளதால், மாணவர்கள் நிபுணத்துவம் பெறலாம். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இந்த ஆய்வகங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், மாணவியர் மொபைல் போன் மூலம் ரோபோடிக்ஸ் இயந்திரத்தை இயக்கி காட்டினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews