👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிளஸ் 1 அட்மிஷனுக்கு பொருட்கள் கேட்ட விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 மற்றும் இதர வகுப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது.இதற்காக, மாணவர்களிடம் சேர், மின்விசிறி வெள்ளை பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் இனாம் கேட்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.இதையறிந்த, சி.இ.ஓ., ஆறுமுகம், கடந்த 26ம் தேதி பிற்பகலில் தலைமை ஆசிரியர், மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.இந்நிலையில், டி.இ.ஓ., செல்வகுமார் நேற்று பிற்பகல் அனைத்து ஆசிரியர்களிடம் ரகசிய விசாரணை நடத்தினார். பின், புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் விசாரணை செய்தார். கடந்த ஒரு மாதமாக பள்ளியில் தொடர் திருட்டால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன், தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் கையூட்டு வாங்கியதாக எழுந்த புகார் குறித்து சி.இ.ஓ., டி.இ.ஓ., விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், 'உள்ளூரிலும், பள்ளியிலும் எனக்கு வேண்டாதவர்கள் என் மீது கலங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.நான் யாரிடத்திலும் ஒரு ரூபாய்கூட வாங்கியதில்லை. டி.இ.ஓ., மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவர்கள் எனக்கெதிராக எந்த புகாரையும் சொல்லவில்லை' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U