👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''வேலூர் லோக்சபா தொகுதியில், 660 ஏழை மாணவர்களுக்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் இலவச கல்வி வழங்கப்படும்,'' என, புதிய நீதிக்கட்சி தலைவரும், ஏ.சி.எஸ்., குழும கல்லூரிகளின் தலைவருமான ஏ.சி., சண்முகம் கூறினார்.வேலூரில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் நான் போட்டியிட்டேன். அப்போது, என்னை வெற்றி பெற செய்தால், என் சொந்த செலவில் தொகுதி முழுவதும் இலவச மருத்துவ முகாம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். சில காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதால், வேலூர் லோக்சபா தொகுதியில் கடந்த வாரம், ஆறு இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 6,000 பேருக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. 200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஏ.சி.எஸ்., குழும கல்லூரிகளின் சார்பில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவியருக்கு ஏ.சி.எஸ்., குழும கல்வி நிறுவனங்களில், சென்னை, ஆரணி, பெங்களூருவில் இயங்கி வரும் கல்லூரிகளில், 660 பேருக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான இலவச கல்வி வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை வரும், 1 முதல், 10 வரை வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:00 க்குள் பெற்று கொள்ளலாம். தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த கல்வியாண்டிலேயே இலவச கல்வி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U