பரமத்திவேலூர் அருகே மாணவர்கள் யாருமே இல்லாததால் அரசு துவக்கப்பள்ளி மூடப்படும் அபாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

பரமத்திவேலூர் அருகே மாணவர்கள் யாருமே இல்லாததால் அரசு துவக்கப்பள்ளி மூடப்படும் அபாயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாத தொடக்கப்பள்ளிகளை, அரசு மூடி வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வேட்டுவம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, மாணவர்கள் யாரும் இல்லாததால் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வேட்டுவம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் இருவர் வடமாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள். ஒரு மாணவர் கபிலர்மலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளியின் குழந்தை. கடந்த ஆண்டு முழு ஆண்டுத்தேர்வு முடிந்து, கோடை விடுமுறைக்கு வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்துக்கு சென்ற இந்த குழந்தைகளின் பெற்றோர், மீண்டும் ஊருக்கு வராததால், அவர்கள் 3 பேரும் பள்ளிக்கு வரவில்லை. தற்போது பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளியின் குழந்தை மட்டுமே படிக்கிறது. ஈராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை போதிய அளவு இல்லாததால், ஒரு ஆசிரியரை தற்காலிகமாக வேறு பள்ளிக்கு மாற்றி பணியமர்த்தி உள்ளனர். இதன் காரணமாக, தற்போது இப்பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். அவரும் பள்ளிக்கு வந்துவிட்டு வெறுமனே இருந்தவிட்டு திரும்புகிறார். மாணவர்கள் யாரும் இல்லாததால், இப்பள்ளி விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வேட்டுவம்பாளையத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் அரசு பள்ளியில் முறையாக கற்பிக்காததால், தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். இதனால் வேட்டுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரின் குழந்தை மட்டும், இப்பள்ளியில் படித்து வருகிறது. அந்த குழந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதனால், பள்ளி காலி கூடாரமாக மாறியுள்ளது. ஒரு ஆசிரியை மட்டும் தினமும் காலையில் பள்ளிக்கு வந்து, வெறுமனே உட்கார்ந்திருந்து விட்டு, மாலையில் வீட்டுக்கு செல்கிறார். பகல் நேரத்தில் 100 நாள் திட்ட பணியாளர்கள், இப்பள்ளியில் ஓய்வெடுத்து வருகின்றனர். எனவே, கல்வி அதிகாரிகள் மாணவர்கள் இல்லாததை காரணம் காட்டி இந்த பள்ளியை மூடாமல், மாணவர்களை சேர்க்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews