வேலூரில் குடிநீர் பிரச்னை மாணவியருக்கு கட்டாய விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

வேலூரில் குடிநீர் பிரச்னை மாணவியருக்கு கட்டாய விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குடிநீர் பிரச்னையால் வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி நர்ஸ் பயிற்சி மாணவியருக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலுார் அருகே அடுக்கும்பாறையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட 11 ஆழ்துளை கிணறுகள் தற்போது வறண்டுள்ளன.குடிநீர் தட்டுப்பாடு துவங்கிய நிலையில் லாரியில் தண்ணீர் வாங்கி சமாளித்தனர். ஆனால் போதிய நிதி இல்லாததால் லாரிகளில் வாங்கும் நீரை அறுவை சிகிச்சை அரங்கிற்கு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மருத்துவக் கல்லுாரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ - மாணவியர் தங்கள் சொந்த செலவில் தண்ணீர் வாங்கி பயன்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. வார்டுகளில் உள்ள நோயாளிகள் அவர்களுடன் உள்ளவர்கள் தண்ணீர் தேவைக்கு அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் நர்ஸ் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவியரில் 30 பேரை தவிர மற்றவர்களை விடுமுறையில் அவரவர் ஊர்களுக்கு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.இதனால் 500க்கும் மேற்பட்ட மாணவியர் நேற்று முன்தினம் முதல் அவரவர் ஊர்களுக்கு சென்றனர். மேலும் அவர்களிடம் சொந்த பிரச்னைகளுக்காக விடுமுறையில் செல்வதாக கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து மருத்துவக் கல்லுாரி டீன் செல்வியை தொடர்பு கொள்ள முயன்ற போது 'அவர் 'ரவுண்ட்ஸ்' சென்று இருக்கின்றார்' என்ற பதிலே திரும்ப திரும்ப கூறப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews