👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை செலுத்தும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள், லேட்டரல் என்ட்ரி திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் (பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெறுவதற்காக பொதுநுழைவுத்தேர்வு ஜூலை 14-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் டிப்ளமோ மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஜூன் 6-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூன் 10-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணத்தை ஜூன் 11-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு தேர்வுநுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஜூலை 14-ஆம் தேதி காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை அனைத்துமாணவர்களுக்கும் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னட மாணவர்களுக்கு பெங்களூரில் மட்டும் கன்னடமொழிப்பாட தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U