ஒரு லட்சத்தை நெருங்கும் ஆர்.டி.இ விண்ணப்பங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 16, 2019

ஒரு லட்சத்தை நெருங்கும் ஆர்.டி.இ விண்ணப்பங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்ட நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்வதற்காக தமிழகம் முழுவதும் 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், சமூகத்தில் நலிந்த பிரிவு, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே கல்விச் செலவை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு ரூ.218 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், ஏழை எளிய, நலிந்த பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 18ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அறிவித்தது. இதையடுத்து, 97 ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இறுதி நாளான 18ம் தேதிக்குள் இன்னும் பலர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோர் www.rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய ஏப்ரல் 22 முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 லட்சம் இடங்களுக்கு விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள பெற்றோர்கள் மே 18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews