அரசு கல்லூரிகளில் பணிபுரிந்த 11 உதவி பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 16, 2019

அரசு கல்லூரிகளில் பணிபுரிந்த 11 உதவி பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் பிஎச்டி படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த 11 உதவி பேராசிரியர்கள் பிஎச்டி படித்ததாக போலியான சான்றிதழ்களை கொடுத்ததை கல்லூரி கல்வி இயக்ககம் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் இயங்காமல் உள்ள பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற்றதாக சான்றிதழ்கள் சமர்ப்பித்து இருந்தது தெரியவந்த நிலையில், 11 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்களின் கலவிச் சான்றிதழ்களை சரிபார்க்குமாறு கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சுமார் 50 பேராசிரியர்களாவது பிஎச்டி படித்ததாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்திருக்கக் கூடும் என சில பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களை கண்டறிந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews