சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, ஒரு கப் பால் வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழகத்தில், காமராஜர் முதல்வராக இருந்த போது, ஏழை குழந்தைகளுக்காக, மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். அதன் பின், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.
அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, மாணவ - மாணவியருக்கு, இலவசமாக சத்துணவு வழங்கப்படுகிறது.தற்போது, மாணவர்களுக்கு, சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது. அத்துடன், ஒரு கப் பால் வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.ஏற்கனவே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பால் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆனால், பால் கெட்டுப் போகும் பொருள். கவனக்குறைவால் கெட்டுப்போன பாலை வழங்கினால், மாணவ - மாணவியர் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பால் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, பால் கெடாமல் இருப்பதற்கான, தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. எனவே, ஐந்தாம் வகுப்பு வரை, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, சத்துணவுடன், ஒரு கப் பால் வழங்குவது குறித்து, தமிழக அரசு மீண்டும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை, 'சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, பாலுடன், ஒரு கப் பதநீர் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews