2 ஆண்டாக ஆன்லைனில் விவரங்கள் பதிவேற்றம் இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

2 ஆண்டாக ஆன்லைனில் விவரங்கள் பதிவேற்றம் இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் முறை அறிமுகமாக இருக்கிறது. அதையொட்டி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளிலும் எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரது தகவல்களையும் முழுமையாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, தந்தை பெயர், முகவரி மற்றும் மாணவரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைந்து முடிக்கும்படியும் முதன்மை செயலர் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews