RBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா..? கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2019

RBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா..? கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உரிய அங்கீகாரம் இன்றி கூகுள் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் கூகுள் பே, (GooglePay) செயலி எவ்வாறு இயங்குகிறது, யார் அனுமதித்தது என்று ரிசர்வ் வங்கிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியும், கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனமும் பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அபிஹிஜித் மிஸ்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் ஆக்ட் 2007, பிரிவு 4-ன் கீழ் கூகுள் இந்தியா டிஜிட்டல் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் கூகுள் பே(GooglePay) செயலி அங்கீகாரம் இன்றி இயங்குகிறது என்று கடந்த மார்ச் 20-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த , பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் ஆக்ட் 2007-ன் படி, ரிசர்வ் வங்கியின் உரிய அங்கீகாரம் பெறாமல், விதிகளுக்குக் கட்டுப்படாமல், எந்த தனி மனிதரும், நிறுவனமும் பணம் பரிமாற்றம் இயக்கத்தை (பேமென்ட் சிஸ்டம்) செயல்படுத்த முடியாது.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான அங்கீகாரம் இல்லாமல், கண்காணிப்பு இல்லாமல் தனி மனிதர்களின் பான் எண், ஆதார் எண், பரிமாற்ற விவரங்கள், வங்கிக்கணக்கு ஆகியவற்றைப் பெற்று செயல்பட்டு வருகிறது. ஆதலால், அங்கீகாரமின்றி செயல்படும் கூகுள் பே நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இந்தியாவில் உரிய அங்கீகாரம் இன்றி பணப்பரிமாற்ற சேவை நடத்திய கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும். இந்த மனு நாட்டின் பொருளாதார நலனுக்காகவும், தனிமனிதர்களின் நலனுக்காகவும் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதிகள் அனுப் ஜெய்ராம் பாம்பானி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் கூகுள் பே செயலி எவ்வாறு இயங்குகிறது என்று கேள்வி எழுப்பினர், அதன்பின், ரிசர்வ் வங்கி, கூகுள் இந்தியா நிறுவனம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews