வேலைவாய்ப்பு பதிவு எப்படி? பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

வேலைவாய்ப்பு பதிவு எப்படி? பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளி களிலேயே, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகி விட்டன; 10ம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியரின் தேர்ச்சியை, வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில், பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, 2011 முதல் பள்ளிகளிலேயே வசதிகள் செய்து, ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டும், அனைத்து பள்ளிகளிலும், வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடித்தவர்களுக்கு, நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டதும், அவரவர் படித்த பள்ளியில், ஆன்லைனில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, மாணவர்களின் சுய விபரங்களை தலைமை ஆசிரி யர்கள், தற்போதே தயார் செய்து வைத்துஇருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews