மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்
பள்ளியைத் தரம் உயர்த்தாதைக் கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கே.பெரியபட்டி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கே.பெரியப் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் 9,10-ம் வகுப்புகளில் சேர, 10 கி.மீ தொலைவிலுள்ள மணப்பாறைக்கு சென்று வர வேண்டியுள்ளது. அதற்கேற்ப போதுமான போக்குவரத்து வசதிகள் இங்கு இல்லை.
இதனால், கே.பெரியபட்டி மற்றும் அதனருகிலுள்ள சுக் கம்பட்டி, மொண்டிப்பட்டி, சத்திரப்பட்டி, சீத்தப்பட்டி, போடுவார்பட்டி, பூங்குடி பட்டி, ஊத்துப்பட்டி, செல்லகவுண்டம் பட்டி, தெற்கு சேர்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைத்தவிர்க்க, கே.பெரியபட்டி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை.
இதைக்கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசுக்கு இதைத் தெரியப்படுத்தும் வகையில் கிராமத்தின் பல்வேறு இடங்களில் இதுதொடர்பான பதா கைகள் வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது
இங்கு 136 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த மாணவ மாணவிகள் உயர் கல்விக்காக 10 கி.மீ தொலைவில் உள்ள மணப்பாறைக்கு சென்று வரும் நிலை உள்ளது
அங்கு செல்ல முறையான போக்குவரத்து வசதிகளும் இல்லை. எனவே பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கடந்த 2014 முதல் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்
இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளான சொக்கம்பட்டி, மொண்டிபட்டி, சத்திரப்பட்டி, சீத்தப்பட்டி, போடுவார்பட்டி, பூங்குடிபட்டி, ஊத்துப்பட்டி, செல்லகவுண்டம்பட்டி, தெற்கு சேர்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உயர்கல்வியை கே.பெரியப்பட்டியிலேயே பயில முடியும் நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமம் முழுவதும் ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Search This Blog
Thursday, April 11, 2019
Home
ELECTION
PEOPLE'S
SCHOOLS
பள்ளியைத் தரம் உயர்த்தாதைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு