வேளாண் படிப்புகளுக்கு மவுசு: பி.எஸ்சி., அக்ரி., பிரிவுக்கே கடுமையான போட்டி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 03, 2019

வேளாண் படிப்புகளுக்கு மவுசு: பி.எஸ்சி., அக்ரி., பிரிவுக்கே கடுமையான போட்டி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

maருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு இணையாக, வேளாண் படிப்புகளுக்கான மவுசும் அதிகரித்து இருப்பதால், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகளும், 26 இணைப்பு கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், 4,800 இடங்களில் இளநிலையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதை தவிர்த்து, 15 சதவீத இடங்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வில், தகுதி பெறுபவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.கடந்தாண்டை விட...கடந்த ஆண்டு, வேளாண் பட்டப்படிப்பில் சேர, 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.





கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் இப்பாடப்பிரிவுகளுக்கு, அதிக போட்டி இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் போன்று வேளாண் படிப்பையும் மத்திய அரசு, 'புரபஷனல் படிப்பாக' அங்கீகரித்துள்ளது முக்கிய காரணம்.இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:இந்தியா, 13 பயிர் உற்பத்தியில், உலகளவில் முதலிடத்தில் உள்ளது.




பணியாட்கள் இன்மை, குறைந்து வரும் நிலம், நீர் போன்ற கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், உற்பத்தி அதிகரிக்க வேளாண் பட்டதாரிகளின் தொழில்நுட்ப பங்களிப்பே முக்கிய காரணம்.ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் வேளாண் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். ஆனால், ஒரு லட்சம் பேர் தேவையுள்ளது. இத்துறை மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது.




குறிப்பாக, அரசுத்துறைகளில் விவசாயம் சார்ந்து மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கு, தகுதி பெறுவதும் எளிமையாகிறது.எதிர்வரும் மூன்று ஆண்டுகளில், 2,500க்கும் மேற்பட்ட விவசாயத்துறை அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே, இந்திய விவசாயத்தின் பல்வேறு பிரிவுகளில், இளைஞர்களின் தேவை அதிகம்.வரும், 5ம் தேதி பல்கலை மட்டுமின்றி அதன் உறுப்பு, இணைப்பு கல்லுாரிகளில் நேரடியாக வந்து அனைத்து வித வசதிகளையும், பல்வேறு வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, பாடப்பிரிவுகளின் வகைகளை அறிந்து கொள்ள, வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வேளாண் பிரிவை பொறுத்தவரையில், பி.எஸ்சி., அக்ரி., பிரிவுக்கே கடுமையான போட்டிகள் எப்போதும் காணப்படும்.







இவ்வாறு, அவர் கூறினார். ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் வேளாண் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். ஆனால், ஒரு லட்சம் பேர் தேவையுள்ளது. இத்துறை மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. குறிப்பாக, அரசுத்துறைகளில் விவசாயம் சார்ந்து மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றபணிகளுக்கு, தகுதி பெறுவதும் எளிமையாகிறது.எதிர்வரும் மூன்று ஆண்டுகளில், 2,500க்கும் மேற்பட்ட விவசாயத்துறை அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே, இந்திய விவசாயத்தின் பல்வேறு பிரிவுகளில், இளைஞர்களின் தேவை அதிகம்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews