ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் இறுதி தேர்வு முடிவு தமிழகத்தில் 39 பேர் தேர்ச்சி: இந்திய அளவில் 579 பேர் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் இறுதி தேர்வு முடிவு தமிழகத்தில் 39 பேர் தேர்ச்சி: இந்திய அளவில் 579 பேர் சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

ஐஏ.எ.ஸ். ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்விஸ் தேர்வுக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 39 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2018ம் ஆண்டுக்கான 812 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 6.25 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து நேர்முக தேர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை மத்திய குடிமை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இறுதி தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: குடிமைப்பணிகளுக்கான தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் நேர்முக தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து 1994 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் 759 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்னர். தமிழ்நாட்டில் மட்டும் 39 மாணவர்கள் வெற்றி பெற்றுள்னர். அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றவர்களில் 126 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் படித்தவர்கள். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 39 பேரில் 35 பேர் எங்கள் அகடாமியில் படித்தவர்கள். தமிழக அளவில் ரிஷாப் என்ற மாணவர் முதல் இடத்தை பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
மேலும் அகில இந்திய அளவில் 23ம் இடத்தையும் பிடித்துள்ளார். ஸ்ருஷ்டி தேஷ்முக் என்ற மாணவி அகில இந்திய அளவில் 5ம் இடத்தை பிடித்துள்ளார். தமிழகம் அளவில் இரண்டாம் இடத்தையும், அகில இந்திய அளவில் 79ம் இடைத்தையும் அபிஷேக் என்ற மாணவர் பிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்த ரிஷாப் சென்னை மதுராந்தகத்தில் வசித்தவர். தற்போது அந்த மாணவர் டெல்லியில் உள்ளார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதவியை தேர்ந்தெடுத்திருந்தார். அதனால், அங்கு அவர் பணியில் சேர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews