👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கேரள அரசு தேர்வாணைய தேர்வில் சபரிமலைக்கு தரிசனம் செய்த 2 இளம்பெண்கள் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்.28ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளம்பெண்கள் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் சபரிமலை உள்பட கேரள முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. கல்வீச்சு மற்றும் தடியடியில் போலீசார், பத்திரிகையாளர் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதற்கிடையே கேரள, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் இருந்து ஏராளமான இளம்பெண்கள் சபரிமலை சென்றனர். அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் சபரிமலையில் தரிசனம் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கடந்த 3ம் ேததி கேரள அரசு தேர்வாணையம் சார்பில் மருத்துவ கல்வி துறையில் ‘மனநல உதவி பேராசிரியர்’ பதவிக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் செப்.28ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வயதில் தரினசம் செய்த 2 இளம்பெண்கள் யார் ? என கேள்வி கேட்கப்பட்டது. இதில் 4 விடைகளும் கொடுக்கப்பட்டன. அதில் பிந்து, கனகதுர்கா பெயரும் இருந்தது. அரசு தேர்வாணை தேர்வில் சபரிமலை இளம்பெண்கள் தரிசன விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது கேரளாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜ, ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்