👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியும் மதுரையில் 20 மாணவர்கள் முடிவு தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இத்தேர்வு முடிவு ஏப்., 19ல் வெளியானது. மாவட்டத்தில் 37,603 மாணவர் தேர்வு எழுதியதில் 35,212 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.64 சதவீதம். இதில் 13 பள்ளிகளை சேர்ந்த 20 மாணவர்கள் மதிப்பெண் விபரங்களை பதிவிறக்கம் செய்தபோது செய்முறை தேர்வு மதிப்பெண் இல்லாமலும், அவர்கள் அந்த தேர்வில் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட செய்முறை தேர்வில் அந்த மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சர்ச்சையால் அந்த 20 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனரா, இல்லையா என இதுவரை தெரியவில்லை.
இதுபோல் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முடிவு தெரியாமல் உள்ளனர். இதனால் அவர்கள் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்கள் செய்முறை தேர்வு எழுதிய விடைத்தாள் நகல்களை ஆதாரமாக இணைத்து தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் செய்முறை தேர்வு மதிப்பெண் மற்றும் தேர்வு முடிவுகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U