👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
வயிற்று வலியால் போராடிக் கொண்டிருந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து, அவரை பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வையும் எழுத வைத்த சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. இந்த உதவியை பதான்கோடு ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் செய்தனர்.
பரபரப்பான இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளாவது:
''பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருந்த நிலையில் ஒரு தேர்வு மட்டுமே மீதமிருந்த நிலையில் அனுஷிகா என்ற மாணவி வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரது குடல்வாலில் ஓட்டை ஏற்பட்டு வலியால் துடித்தபடி மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
இது ஒரு சவாலான பணி. ஏனெனில் வயிற்றில் ஏற்பட்டுள்ள குடல்வால் அழற்சி பகுதியைச் சுற்றி கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு கட்டிகள் உருவாகியிருந்தன.
அர்ப்பணிப்புமிக்க அறுவை சிகிச்சையினால் மாணவியின் எதிர்காலம் மீட்டெடுக்கப்பட்டது. அத்துடன் யாருடைய உதவியுமின்றி அவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது இறுதித் தேர்வையும் எழுதினார்''.
இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்