👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பில் எந்த ஒரு ஆசிரியரும் தனிப்பட்ட முறையில் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு அன்னுார், தெற்கு, வடக்கு, கணேசபுரம், பசூர், துவக்கப்பள்ளிகள், குன்னத்துார், பொகலுார் நடுநிலைப் பள்ளிகளில் நேற்று நடந்தது. தெற்கு துவக்கப் பள்ளியில், ஆசிரிய பயிற்றுனர்கள் பேசுகையில், &'2009 கட்டாய கல்வி சட்டத்தில், பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுச்சான்று உள்பட எந்த சான்றும் இல்லாவிட்டாலும், பள்ளியில் மாணவரை சேர்க்க வேண்டும். எந்த வயதில் சேர்க்கைக்கு வந்தாலும், சிறப்பு பயிற்சி அளித்து அந்த வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும். ஆறு முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம். &'பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் கற்பிக்கப்படுவதையும், ஆசிரியர்கள் உரிய நேரப்படி பள்ளிக்கு வருவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த ஆசிரியரும், தனிப்பட்ட முறையில் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் எடுக்கக்கூடாது&' என்றனர்.
பயிற்சி வகுப்பில், ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் ரங்கராஜ், ஜார்ஜ், ஆசிரிய பயிற்றுனர்கள் பங்கேற்றனர். உறுப்பினர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்