திறந்தவெளி பள்ளியில் 10ம் வகுப்பு பயில மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 10, 2019

திறந்தவெளி பள்ளியில் 10ம் வகுப்பு பயில மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் பத்தாம் வகுப்பு படிக்க விரும்புவோர் மாவட்ட ஆசிரியர் பள்ளி நிறுவனத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் நிறுவனம் மற்றும் நாவலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து தேசிய திறந்தவெளி பள்ளி மூலமாக பத்தாம் வகுப்பு தொடங்க உள்ளது. இவ்வகுப்பு, ஞாயிறுதோறும் நாவலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு தொடர முடியாதவர்கள், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி 14 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த வகுப்பில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
இவ்வகுப்பில் சேர விரும்புவோர், ஆதார் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி கல்வி சான்றிதழ்களை எடுத்து வர வேண் டும். வரும் 10ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை ஆன்-லைன் மூலமாக சேர்க்கை நடைபெறும். இவ்வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை அலுவலக நாட்களில் அணுகி, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews