👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இந்த அரசாணையால் பொதுப்பிரிவினர் உட்பட மற்ற பிரிவினருக்கு பெரிய பாதிப்பு இருக்காது ஆனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே 2019-2020 ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே 2019-2020ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. . அதேபோல பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையால் பொதுப்பிரிவினர் உட்பட மற்ற பிரிவினருக்கு பெரிய பாதிப்பு இருக்காது ஆனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு நாடு முழுவதும் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்ட பல்வேறு வரையறைகளை செய்துவருகிறது எனவும் அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2010ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொது பிரிவினருக்கு (OC) 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிய விதிமுறைகளை முறைப்படுத்தி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் என்ற திடீர் உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என கூறப்படுகிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்