👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கல்வி, விவசாய கடன் கட்டாய வசூலை தடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பி.ஆர்.பாண்டியன் மனு
தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை வங்கிகள் கல்வி, விவசாய கடன்களுக்கான கட்டாய வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்தனர். அப்போது அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி கடன் வசூல் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பது சட்ட நடைமுறை. ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அனைத்து நிர்வாகங்களும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன.
இதை சாதகமாகப் பயன்படுத்தி, கல்வி, விவசாய கடன் வசூல் என்ற பெயரில் மாணவர்களையும், விவசாயிகளையும் வங்கிகள் அச்சுறுத்துகின்றன. வங்கி வாயில்களில் பெயர்களை வெளியிட்டு அவமானப்படுத்துகின்றனர்.
எனவே, தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை, வங்கிகள் கடன் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், 2017-18-ம் ஆண்டுக்கு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடி செய்வதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்