பண பரிமாற்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்க பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு: - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

பண பரிமாற்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்க பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு:

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேர்தல் நேரத்தில் நடைபெறும் பண பரிமாற்ற தகவல்களை ஐடிக்கு போன், வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்: பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
தேர்தல் நேரங்களில் அதிக பண நடமாட்டம் பற்றிய தகவல் பொதுமக்களுக்கு தெரிந்தால் வருமான வரித்துறைக்கு தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் கடந்த 3 நாளில் மட்டும் ₹3.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 64,385 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் சுவர்களில் மட்டும் 24 ஆயிரம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 875 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தவிர சாதாரண பொதுமக்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் ₹50 ஆயிரத்துக்கும் மேல் ₹10 லட்சத்துக்குள் பணம் எடுத்து சென்றால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். ₹10 லட்சத்துக்கும் மேல் ஆவணங்களுடன் பணம் வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்களிடம் சரியான ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். அரசியல் கட்சியினர் ₹50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். அதேபோன்று ₹10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசு பொருட்கள், மதுபான பாட்டில்கள் வாகனங்களில் இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களிடம் பிடிபட்ட பணம் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பிடிபட்ட பணத்தை சரியான ஆவணங்களை காட்டி பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக எல்லா மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தலைமையில் செலவின கண்காணிப்பாளர், மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 என்ற அடிப்படையில் 702 பறக்கும்படை, 702 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நாளன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்கும். அதேபோன்று, கிறிஸ்தவர்களும் பெரிய வியாழன் அன்று தேர்தல் நடத்தக்கூடாது என்று இதுவரை 4 அமைப்புகள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சிக்கு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ₹2 ஆயிரம் வழங்க கூடாது என்று எந்த கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவில்லை.நகர் பகுதிகளில் சுவர்களில் யாரும் விளம்பரம் எழுத கூடாது. கிராமங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். தேர்தல் விதிமீறல் குறித்து படம், வீடியோ எடுத்து சி-விஜில் ஆப்.பில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படும். 1950 என்ற இலவச தொலைபேசியிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews