ஊதியக் குழு பரிந்துரைகள் போது மக்கள், அரசு ஊழியர்கள் இடைவெளி அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 18, 2019

ஊதியக் குழு பரிந்துரைகள் போது மக்கள், அரசு ஊழியர்கள் இடைவெளி அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர்களுக்கும் மக்களுக்குமான வருமான இடைவெளி அதிகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீதிபதிகள், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணையின்போது அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டிக்காக செலவிடப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர், மற்றவர் இடையே இடைவெளி அதிகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும் அதேநேரத்தில் பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அரசுக்கல்லூரிகளை நாடுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நீதிபதிகளின் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாமே? என்றும் கேள்வி எழுப்பினர். உரிமைக்காக போராடும் ஆசிரியர்கள், கடமைகளிலும் கருத்தாய் இருக்க வேண்டும் என்ற நீதிபதிகள், தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக யூனியன்கள் செயல்படுவதால், நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளதாகவும், யூனியன்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது என்றும் தெரிவித்தனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் குறையும் என்றும் நீதிபதிகள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியபிடித்தத்திற்கு பதில் விடுமுறைக் காலத்தை கழித்துக்கொள்ளலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆசிரியர்கள் இடமாறுதலை ரத்து செய்வது குறித்து ஜாக்டோ- ஜியோ தரப்பில் இடைமனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews