பொதுத்தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

பொதுத்தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
"பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் இந்தாண்டு சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன," என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையில் நடந்தது.அமுதவல்லி பேசியதாவது: மார்ச் 1 முதல் 22 வரை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் நடக்கின்றன. இந்தாண்டு புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் மாணவர் தேர்வு எழுகின்றனர். கடந்தாண்டு பிளஸ் 1ல் தோல்வியுற்ற பாடத்திற்கு, இந்தாண்டு பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவர், தோல்வியுற்ற பிளஸ் 1 தேர்வை &'அரியராக&' (பழைய பாடத் திட்டத்தில்) புதிதாக எழுதும் மாணவருடன் எழுத உள்ளனர்.
இருவகை வினாத்தாளை கவனமாக வழங்க வேண்டும். விடைத்தாளில் மாணவர் எழுதாத பக்கத்தில் பேனாவால் அடித்துவிட்டு அந்த மாணவரிடம் கையெழுத்து பெறுவது கட்டாயம். இத்தேர்வில் சோதனை அடிப்படையில் மூன்று மாவட்டங்களில் உள்ள மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அடுத்தாண்டு அனைத்து மையங்களிலும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.கூட்டத்தில் டி.இ.ஓ.,க் கள் அமுதா, முத்தையா, இந்திராணி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சின்னதுரை பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews