சேர்க்கையில் தமிழகம் முதலிடம் : அமைச்சர் அன்பழகன் பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

சேர்க்கையில் தமிழகம் முதலிடம் : அமைச்சர் அன்பழகன் பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உயர்கல்வித்துறை மாணவர்கள் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது&'&' என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பேசினார். கோவை பாரதியார் பல்கலையின், 35வது பட்டமளிப்பு விழா பல்கலை அரங்கில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் மற்றும் பல்கலை வேந்தர் பன்வாரிலால் புரோகித் தலைமைவகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. உயர்கல்வித்துறை நம் நாட்டின் மாணவர்கள் சேர்க்கை சதவீதம், 25.8 சதவீதமாக உள்ளது; 2020ல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறை மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் உள்ளது. அதன் படி, 2017-- 18 ம் ஆண்டு சேர்க்கையின் படி, 48.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளோம்.
பாரதியார் பல்கலையில், 125 கோடி ரூபாய் மதிப்பில் நுணுக்கமான ஆய்வு கருவிகளை நிறுவுவதற்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்நிதிக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு மையங்களில் இப்பல்கலையும் ஒன்று. இவ்வாறு,அமைச்சர் அன்பழகன் பேசினார்.விழாவில், பி.எச்டி., எம்.பில்., இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 88 ஆயிரத்து 762 பேர் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில், டெல்லி உயிர் அறிவியல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் பொது இயக்குனர் அஜய்குமார் சிங், பல்கலை ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் மன்கத்ராம் சர்மா, பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
மேடையில் மயங்கிய அமைச்சர் : பட்டமளிப்பு விழா மதியம், 12:00 மணியளவில் துவங்கியது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பட்டங்களை நின்றபடி அமைச்சர் அன்பழகன் வழங்கினார். அப்போது, உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாலும், மேடையில் நின்று கொண்டிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மயங்கினார். அருகில் இருந்தவர்கள், தாங்கிப்பிடித்து தண்ணீர் மற்றும் சர்க்கரை கொடுத்ததால் மீண்டும் எழுந்து நின்றார். இதனால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews