புல்வாமா மாணவர் ஆவணம் : உளவுத்துறை விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

புல்வாமா மாணவர் ஆவணம் : உளவுத்துறை விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மசினகுடியில் கிடைத்த, புல்வாமா மாவட்ட மாணவரின் ஆவணங்கள் குறித்து, உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே, மரவகண்டி அணை பகுதியில் கிடந்த, &'பர்ஸ்&' ஒன்றை, சமீபத்தில் சுற்றுலா பயணி எடுத்து, அதிரடிப்படையிடம் ஒப்படைத்தார்.
மசினகுடி போலீசார் ஆய்வு செய்ததில், காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், பதுார் பகுதியைச் சேர்ந்த அசாத் அஹமது ஷா என்பவரின் ஆதார் கார்டு, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஏ.டி.எம்., கார்டு இருந்தது.அதில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அஹமது ஷா, புல்வாமா பகுதியில் இருந்து, தற்போது, பெங்களூரு, குடிமாவு பகுதியில் உள்ள விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி, இறுதியாண்டு படிப்பது தெரிந்தது.நண்பர்களுடன், 2018 ஏப்., 18-ல், மசினகுடிக்கு சுற்றுலா வந்த போது, பர்ஸ் தொலைந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஓராண்டு ஆகியும், பர்ஸ் புதிதாக இருந்ததும், அவர், ஏ.டி.எம். கார்டு மூலம், ஜன., 30-ம் தேதி வரை பண பரிமாற்றம் செய்துள்ளதும் தெரிந்தது. இதனால், உளவுத்துறை போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.நீலகிரி, எஸ்.பி., சண்முகபிரியா கூறுகையில், &'&'இது குறித்து, எந்த தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை; விசாரித்து கூறுகிறேன்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews