உணவு
கஜா புயலின் கோரப் பசிக்கு டெல்டா மாவட்டங்கள் இரையாகியுள்ளன. மின்சாரத்தை பார்த்தே 5 நாள்கள் ஆகிவிட்டதால் விடியலை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் அம்மக்கள். உண்ண உணவு, குடிக்க நீர்கூட இல்லாமல் இழப்புகளை சுமந்துகொண்டே நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இதோ உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிக்கரம் நீண்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், ``நாள்தோறும் 2,000 பேருக்கு உணவு வழங்குகிறோம் என்றபடி பேச்சைத் தொடங்கினார் அந்த அரசுப்பள்ளி ஆசிரியர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் செல்வம்.
உதவி
ஜூனியர் ரெட்கிராஸில் இணைந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவிக்கரம் நீட்டிவருகிறார். அவரிடம் பேசினோம். ``முத்துப்பேட்டையில் உள்ள பெரும்பாலான ஓட்டுவீடுகள், கூரை வீடுகள் கஜாவின் சீற்றத்தால் காணாமல் போய்விட்டன. ஒரு தென்னை மரம் வளர 8 ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க. 100 மரங்கள் இருந்த எடத்துல 5 மரங்கள்தான் இருக்கு. மக்களோட வாழ்வாதாரம் முழுசா போச்சு. கிராமத்தில் இருக்குறவங்க பலபேருக்கு இப்போ வீடே இல்ல. நாங்க இருக்குற ரெட் கிராஸோட `கலாம் கனவு இயக்கம் ’ கைகோத்து இருக்கு. ஒரு நாளைக்கு 2,000 பேருக்கு உணவு வழங்கிட்டு வர்றோம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்