தலைநகர் டில்லியில், தீபாவளிக்கு பின், காற்றில் ஏற்படும் கடும் மாசில் இருந்து, மாணவர்களை காப்பதற்காக, பள்ளிகள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, காற்று மாசு அளவு, சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்றில் இருந்து, மாசின் அளவு கூடுதலாக இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், தீபாவளிக்கு அதிக அளவிலான பட்டாசுகள் வெடித்த பின், இந்த மாசு அளவு, பன்மடங்கு அதிகரிக்கும்.
குறிப்பாக, டில்லியில், இந்த ஆண்டு, சுற்றுச்சூழல், மிக கடுமையாக பாதிக்கப்படும்? என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதைஅடுத்து, பள்ளி நிர்வாகங்கள், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும்படி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் காலையில் நடக்கும் இறை வணக்கத்தை திறந்தவெளியில் நடத்தாமல், வகுப்பறைக்கு உள்ளேயே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மூக்கு மற்றும் வாயை மூடும் முகமூடி அணிந்து வரும்படி, பள்ளி உத்தரவிடப் பட்டுள்ளது.
சுவாசக் கோளாறுகளுக்கு, நெல்லிக்காய் சிறந்த மருந்து என்பதால், பல பள்ளிகள், மாணவர் களுக்கு நெல்லிக்காய் வினியோகிக்க திட்டமிட்டுள்ளன.இது தொடர்பாக, &'டில்லி கல்வி இயக்குனரகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்&' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்