ராகிங் ஒழிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 05, 2018

ராகிங் ஒழிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை உத்தரவு

மாணவர்கள் மத்தியில், ராகிங்கை கட்டுப்படுத்த, 15 வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கல்லுாரிகளில் புதிதாக சேரும் மாணவர்கள், கல்லுாரி மற்றும் விடுதி வளாகங்களில், சீனியர் மாணவர்களால், ராகிங் செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், ராகிங் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு ஜூலையில், கல்லுாரிகள் திறந்ததும், பல்வேறு உத்தரவுகளை, உயர் கல்வித்துறை பிறப்பித்தது.
ஆலோசனை இந்நிலையில், ராகிங் தொடர்பாக, பல்கலை துணைவேந்தர்களை அழைத்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு மாதங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், சில நடவடிக்கைகளை பின்பற்ற, கல்லுாரி களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.மீண்டும், அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித் துறை சார்பில், இரண்டாம் கட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதில், கவர்னர் அலுவலக உத்தரவுப்படி, ராகிங் ஒழிப்புக்கு, 15 வகையான நடவடிக்கைகளை கல்லுாரி கள் மேற்கொள்ள வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் என்ன?முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனி விடுதி ஏற்பாடு செய்வது; புகார் அளிக்க சுதந்திரமான வசதி உருவாக்குவது, கல்லுாரி மற்றும் விடுதி வளாகங்களில், விழிப்புணர்வு பேனர் வைப்பது; மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ராகிங்கின் தீமைகளை விளக்குவது போன்றவை, இவற்றில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் குறித்து, உரிய படங்கள் மற்றும் ஆவணங்களுடன், வரும், 15க்குள், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews